தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவுரை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: தடுப்பூசி போடும் பணியை தீவிரபடுத்தும்படி தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

டில்லி, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட் பரவலை கருத்தில் கொண்டு அம்மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

latest tamil news

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தகுதியுள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். அதனுடன் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன், 5 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.