கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3310 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் சேதம் விளைவித்த 858 சம்பவங்கள் தொடர்பில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களில் 1182 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 2128 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.