தர்மபுரி || இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் நல்லூர் காடு பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி ராணி (60). இவர் நேற்று மகன் செந்தில்குமாருடன் இருசக்கர வாகனத்தில் மிளகு நாற்று வாங்குவதற்காக பொன்னகரத்திற்கு சென்றுள்ளார்.

பின்பு அங்கிருந்து மூங்கில்மடுகு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ராணி இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராணியை மீட்டு சிகிச்சைக்காக பொன்னகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராணி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.