கைலாசா அதிபருக்கு திடீர் கைது வாரண்டு.! எப்படி கொடுப்பது.? என போலீஸ் குழப்பம்

பாலியல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கு கொடுத்து வரும் கைலாசா அதிபர் நித்யானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில், தன்னை சாமியாராக அவதானித்துக் கொள்ளும் நித்யானந்தாவுக்குச் சொந்தமான ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் சிஷ்யை ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாலியல் வழக்கில் நித்தியானந்தா ஆஜராக கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

இந்த பாலியல் தொல்லை வழக்கு வியாழக்கிழமை ராமநகர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராகாததால், அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

வழக்கு விசாரணைக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் நித்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இருக்கிறதா? இல்லையா? எங்கிருக்கின்றது? என்பதே தெரியாத கைலாசா தேசத்தில் பதுங்கி இருக்கும் நித்தியை எப்படி கைது செய்வது என தெரியாமல் போலீசார் விழிபிதுங்கி போயுள்ளனர்.

முதற்கட்டமாக பிடதி ஆசிரமத்தின் நிர்வாகம் வழியாக நித்திக்கு பிடிவாரண்ட் உத்தரவு நகலை போலீசார் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.