"வேலையில்லை! உணவில்லை"- குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற தந்தை

தந்தையே தனது 11 மாத குழந்தையை கால்வாயில் வீசிக் கொன்ற கொடூர சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்ட முகேஷ் பெர்வால், தனது தந்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மனைவி உஷா, குழந்தை ராஜ்வீரையும் ராஜஸ்தானுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் திடீரென தந்தை ஏற்றுக்கொள்ளமாட்டார் எனக்கூறி மனைவியை ஓரிடத்தில் இருக்குமாறு கூறிவிட்டு குழந்தையை மட்டும் தூக்கிச் சென்ற முகேஷ், குழந்தையை நர்மதா கால்வாயில் வீசி கொன்றிருக்கிறார்.
image
திரும்பி வந்த முகேஷ், குழந்தையை தன் தந்தையிடம் விட்டு விட்டு வந்ததாக மனைவியிடம் பொய் கூறியிருக்கிறார். ஆனால், முகேஷ் குழந்தையை கால்வாயில் வீசியதை பார்த்த ஒருவர் அளித்த புகாரின் பேரில், அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 24 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின், குழந்தையின் சடலத்தை டெட்ரால் கிராமத்தில் பாயும் கால்வாயில் போலீசார் கண்டெடுத்தனர்.
அவரிடம் விசாரித்ததில், தாம் தற்போது வேலையில்லாமல் இருப்பதாகவும் தனக்கு போதிய வருவாய் இல்லாததால் குழந்தைக்கு உணவு கூட கொடுக்க முடியாமல் இருந்ததாலும் குழந்தையைக் கால்வாயில் வீசியதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.