இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மேடை பேச்சுக்களை நேரலையில் ஒளிபரப்ப அந்நாட்டு, ‘டிவி’ சேனல்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நேற்று முன் தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தேச துரோக வழக்கில் சமீபத்தில் கைதான, தன் கட்சி பிரமுகர் ஷபாஸ் கில் நடத்தப்பட்ட முறை குறித்து ஆளுங்கட்சியை குற்றஞ்சாட்டினார்.சில போலீஸ் உயரதிகாரிகள், பெண் மாஜிஸ்திரேட், பாக்., தேர்தல் ஆணையம் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக கூறினார்.
மேலும், அரசுக்கு எதிராக பல அதிரடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இம்ரானின் பேச்சை, அந்நாட்டின் செய்தி சேனல்கள் நேரலையில் ஒளிபரப்பின.இந்நிலையில், ‘இம்ரான் கானின் பேச்சுக்களை டிவி சேனல்களை இனி நேரலையில் ஒளிபரப்ப கூடாது’ என, அந்நாட்டின் மின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, அரசு அமைப்புகளை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக, இம்ரான் கான் மீது வழக்கு தொடர, அரசு ஆலோசித்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement