விற்றுத்தீர்ந்த தரிசன டிக்கெட்டுகள்..!- திருப்பதி கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!!

இந்தியாவில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி எழுமலையான் கோவில். தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்திய அளவில் அதிக வருமானம் ஈட்டும் கோவிலும் திருப்பதி கோவில் தான்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கான ஆறு லட்சம் டிக்கெட்டுகள் 72 மணி நேரத்தில் விற்று உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் சாமி தரிசனத்திற்காக ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் கடந்த 18ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிட துவங்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும் சுமார் 25 ஆயிரம் டிக்கெட் வீதம் 24 நாட்களுக்கு ஆறு லட்சம் டிக்கெட்டுகள் அன்று வெளியிடப்பட்டன. அவ்வாறு ஆன்லைனில் வெளியிடப்பட்ட 6 லட்சம் டிக்கெட்டுகளும் அடுத்த 72 மணி நேரத்திற்குள்ளாக விற்று தீர்ந்துள்ளது.தரிசன டிக்கெட்டுகள் மூலம் தேவஸ்தானத்திற்கு சுமார் 18 கோடி ரூபாய் வருமானம் கிடைக்க பெற்றுள்ளது.

இம்மாதம் 22 ஆம் தேதி அடுத்த மாதத்திற்கான அங்க பிரதக்ஷன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 750 டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளது.மேலும், செப்டம்பர் 27ஆம் தேதி முதல் தொடங்கி 9 நாள்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் அங்க பிரதக்ஷன டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை
www.tirupatibalaji.gov.in
என்ற தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய அளவில் பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் ஆன்மிக தளமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் திகழ்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.