தமிழ்நாட்டின்  பல்வேறு  மாவட்டங்களில் 26ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு! சென்னை  வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டின்  பல்வேறு  மாவட்டங்களில் 26ந்தேதி  வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை  வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் நிலவும்  வளிமண்டல கீழடுக்கு சுழற்றி சகாரணமாக,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 26-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 23,24,25,26 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.