ஐதராபாத்:
விஜய்
தேவரகொண்டா
நடித்துள்ள
லைகர்
திரைப்படம்
நேற்று
திரையரங்குகளில்
வெளியானது.
பூரி
ஜெகன்நாத்
இயக்கியுள்ள
இப்படம்
குத்துச்சண்டை
பின்னணியில்
பிரம்மாண்டமாக
உருவாகியுள்ளது.
ஆனால்,
படத்திற்கு
எதிர்பார்த்த
அளவில்
இருந்து
வரவேற்பு
கிடைக்காததால்
லைகர்
படக்குழு
ஏமாற்றத்தில்
உள்ளது.
பாக்ஸர்
விஜய்
தேவரகொண்டா
லைகர்
திரைப்படம்
குறித்து
அறிவிக்கப்பட்ட
நாளில்
இருந்தே,
அதன்
மீதான
எதிர்பார்ப்பு
அதிகரித்துக்
கொண்டே
சென்றது.
பாக்ஸராக
நடித்துள்ள
விஜய்
தேவரகொண்டா,
அதற்காக
பல
பயிற்சிகளில்
ஈடுபட்டார்.
மிரட்டும்
வகையில்
சிக்ஸ்
பேக்
உடற்கட்டுடன்
மாஸ்
காட்டினார்.
மேலும்,
இந்தப்
படத்தில்
பிரபல
ஹெவி
வெயிட்
சாம்பியன்
மைக்
டைசனும்
நடித்தது,
எதிர்பார்ப்பை
இன்னும்
எகிற
வைத்தது.
விஜய்
தேவரகொண்டாவுடன்
அனன்யா
பாண்டே,
ரம்யா
கிருஷ்ணன்
ஆகியோரும்
நடித்திருந்தனர்.

சவால்
விட்ட
விஜய்
தேவரகொண்டா
லைகர்
ரிலீஸை
முன்னிட்டு
சென்னை,
மும்பை,
பஞ்சாப்,
ஐதராபாத்,
பெங்களூரு
உள்ளிட்ட
பல
நகரங்களிலும்
ப்ரோமோஷன்
நிகழ்ச்சிகள்
நடைபெற்றன.
இதில்,
விஜய்
தேவரகொண்டா,
அனன்யா
பாண்டே
இருவரும்
தொடர்ச்சியாக
பங்கேற்று
வந்தனர்.
அப்போது
இந்தி
திரைப்படங்கள்
பாய்காட்
செய்யப்படுவது
குறித்து
விஜய்
தேவரகொண்டா
காட்டமாக
பேசியிருந்தார்.
இதனால்
கொதித்துப்
போன
நெட்டிசன்கள்,
லைகர்
படத்தையும்
பாய்காட்
செய்யத்
தொடங்கினர்.
ஆனால்,
அவர்களுக்கு
சவால்
விட்ட
விஜய்
தேவரகொண்டா,
லைகர்
கண்டிப்பாக
வெற்றி
பெறும்
என
பதிலடி
கொடுத்தார்.

தலைகீழாகிப்
போன
லைகர்
இந்நிலையில்,
பான்
இந்தியா
படமாக
பல
மொழிகளில்
வெளியான
‘லைகர்’
திரைப்படம்,
மண்ணை
கவ்வியதாக
சொல்லப்படுகிறது.
அதிக
எதிர்பார்ப்பு,
விஜய்
தேவரகொண்டாவின்
சவால்
என
எல்லாமே
புஷ்வானமாகி
விட்டதாக
விமர்சனம்
எழுந்துள்ளது.
மேக்கிங்,
திரைக்கதை
என
லைகர்
படம்
மொத்தமாக
சொதப்பிவிட்டதாக
ரசிகர்கள்
கூறி
வருகின்றனர்.
இதனால்
பாக்ஸ்
ஆபிஸ்
ரேஸில்
இருந்து
பின்வாங்கியுள்ளது
லைகர்.

விரக்தியில்
விஜய்
தேவரகொண்டா
‘லைகர்’
படத்தின்
படுதோல்வியால்
விஜய்
தேவரகொண்டா
கடும்
விரக்தியில்
உள்ளதாக
கூறப்படுகிறது.
விஜய்
தேவரகொண்டாவின்
தரமான
உழைப்புக்கு
பாராட்டுகள்
கிடைத்திருந்தாலும்,
படம்
தோல்வி
அடைந்ததை
அவரால்
ஏற்றுக்கொள்ள
முடியவில்லை
என
சொல்லப்படுகிறது.
இதனிடையே
கர்நாடகாவில்
லைகர்
படம்
பார்க்க
17%
பார்வையாளர்கள்
மட்டுமே
தியேட்டர்களுக்கு
சென்றுள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.
இதனால்
விரக்தியின்
உச்சத்திற்கே
சென்றுவிட்ட
விஜய்
தேவரகொண்டா
யாரிடமும்
பேசாமல்,
தனிமையில்
இருப்பதாகவும்,
கரன்
ஜோஹரின்
செல்போன்
நம்பரையும்
ப்ளாக்
செய்துவிட்டதாகவும்
சொல்லப்படுகிறது.
லைகர்
படத்தை
இந்தியில்
கரன்
ஜோஹர்
தான்
வெளியிட்டார்
என்பது
குறிப்பிடத்தக்கது.