ஆப்கனில் குண்டுவெடிப்பு மதகுரு உட்பட 18 பேர் பலி| Dinamalar

ஹெராத்:ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் மதகுரு உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்க படைகள் வெளியேறின. அதன் பின் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளன.
இதற்கிடையே, அங்கு பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள ஹெராத் நகரின் முக்கிய மசூதி ஒன்றில், நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்; 23 பேர் படுகாயமடைந்தனர். இதில், தலிபான் ஆதரவு மதகுருவான முஜிப் ரஹ்மான் அன்சாரியும் கொல்லப்பட்டதாக தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.