ஹெராத்:ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் மதகுரு உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்க படைகள் வெளியேறின. அதன் பின் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளன. இதற்கிடையே, அங்கு பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள ஹெராத் நகரின் முக்கிய மசூதி ஒன்றில், நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்; 23 பேர் படுகாயமடைந்தனர். இதில், தலிபான் ஆதரவு மதகுருவான முஜிப் ரஹ்மான் அன்சாரியும் கொல்லப்பட்டதாக தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
ஹெராத்:ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் மதகுரு உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்