மக்கள் தொகையை கட்டுப்படுத்த மனு.. மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயற்கை வளங்கள் குறைவாக உள்ள நிலையில் மக்கள் தொகை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக அகில பாரதிய சாந்த் சமிதியின் பொதுச்செயலாளர் தண்டி சுவாமி ஜீதேந்திரானந்த் சரஸ்வதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கருத்தடை மாத்திரைகள், தடுப்பூசிகள் போன்றவற்றை விநியோகம் செய்ய ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையை சுகாதார தினமாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டது. விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.