காசியாபாத்: உ.பி.,யில் தான் கொண்டு வந்த வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் வலியால் துடித்த போதும் கண்டு கொள்ளாமல் இருந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உ.பி., மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், லிப்ட்டில் சிறுவன் ஒன்று நின்று கொண்டிருந்தான். அப்போது, பெண் ஒருவர் வளர்ப்பு நாயுடன் உள்ளே வந்தார். நாயை பார்த்த பயத்தில் சிறுவன் முன்னே, அமைதியாக சென்றான். ஆனால், அந்த நாய் சிறுவனின் காலை கடித்தது. இதனால், அந்த சிறுவன் கடிபட்ட இடத்தில் கையால் தேய்த்தபடி வலியால் துடித்து கதறினான். ஆனால், நாய் உரிமையாளரோ தனக்கு எதும் தெரியாதது போல் கண்டும் காணாமலும் இருந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. சிறுவனின் பெற்றோரும் காசியாபாத் போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசியாபாத்: உ.பி.,யில் தான் கொண்டு வந்த வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் வலியால் துடித்த போதும் கண்டு கொள்ளாமல் இருந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.உ.பி., மாநிலம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்