கொழும்பில் இருந்து கண்டி ,அநுராதபுரம் வரை புதிய சொகுசு ரயில் சேவைகள்

வார இறுதியில், கண்டி மற்றும் அநுராதபுரம் வரை இரண்டு புதிய சொகுசு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒக்டோபர் மாதம் முதலாம் ஆம் திகதி முதல் இரண்டு புதிய ரயில் சேவைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளன. சனிக்கிழமை அதிகாலையில் பயணிக்க ஆரம்பிக்கும் கண்டிக்கான ரயில் இரண்டு மணித்தியாலங்கள் 45 நிமிடங்களில் கண்டியை சென்றடையும். அதேவேளை அனுராதபுரத்திற்கான ரயில் நான்கு மணித்தியாலங்களில் அனுராதபுரத்தை சென்றடையும்.

இவை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பை வந்தடைய உள்ளன. 

இதேவேளை, எதிர்காலத்தில் கதிர்காமம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்காக வார இறுதி நாட்களில் பெலி அத்த வரையிலான விசேட ரயில் சேவை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.