தமிழகம் வர முயன்ற 12 இலங்கை தமிழர்கள் கைது

ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னார் கடற்கரை பகுதியில்  நேற்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சோதனையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது தனுஷ்கோடிக்கு வருவதற்கு கடற்கரையில் காத்திருந்த 12 தமிழர்கள் உடமைகளுடன் பிடிபட்டனர். விசாரணையில், தமிழகத்திற்கு செல்ல படகிற்காக காத்திருந்ததாக தெரிவித்தனர். 12 பேரையும் கைது செய்த கடற்படையினர் மேல் விசாரணைக்காக முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.