பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல்

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் ஆஸ்த்துமா (மூச்சுத்தடை நோய் (Asthma)) நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் அறுபது சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைக்கான காரணம் குழந்தைகள் அறியாமலேயே கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமிடத்து, அது குறித்து கவனம் செலுத்துமாறு அவர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அதிகமான குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.