மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.72 அடியாக சரிவு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை தணிந்ததால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் 9,500கனஅடியாக நீடிக்கிறது. அங்கு ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அருவியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 12,303 கனஅடியாகவும், மாலையில் 11,212 கனஅடியாகவும் சரிந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 10,497கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 118.76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 118.72அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 91.44டிஎம்சியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.