தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06.10.2022 மற்றும் 07.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

கீழ் கோதையார் ஏஆர்ஜி (கன்னியாகுமரி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), திருவாடானை (ராமநாதபுரம்), கொடநாடு (நீலகிரி) தலா 4, வேடசந்தூர் (திண்டுக்கல்), தேவாலா (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), தானியமங்கலம் (மதுரை), ஆனைப்பாளையம் (கரூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 3, அவினாசி (திருப்பூர்), காங்கேயம் (திருப்பூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), நத்தம் (திண்டுக்கல்), சூருளக்கோடு (கன்னியாகுமரி), நடுவட்டம் (நீலகிரி), அரவக்குறிச்சி (கரூர்), க்ளென்மார்கன் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), பரமக்குடி (இராமநாதபுரம்), பார்வூட் (நீலகிரி), ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி (நீலகிரி), பந்தலூர் (நீலகிரி), வெள்ளக்கோவில் (திருப்பூர்) தலா 2, சூரங்குடி (தூத்துக்குடி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கோயம்புத்தூர் ஏ.டபிள்யூ.எஸ், சிற்றாறு (கன்னியாகுமரி), சிவகாசி (விருதுநகர்), சிவகங்கை, இளையங்குடி (சிவகங்கை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), மீமிசல் (புதுக்கோட்டை), ஆய்க்குடி (தென்காசி), பெரியார் (தேனி), தொண்டி (ராமநாதபுரம்), அவலாஞ்சி (நீலகிரி), க.பரமத்தி (கரூர்), தென்காசி, குன்னூர் பிடிஓ (நீலகிரி), சாத்தூர் (விருதுநகர்), பவானிசாகர் (ஈரோடு), புத்தன் அணை (கன்னியாகுமரி), சத்தியார் (மதுரை) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 
03.10.2022 மற்றும் 04.10.2022: லட்சதீவு பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய
தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 05.10.2022 மற்றும் 06.10.2022: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.