தேவரின் தங்க கவசத்தை பெற அதிமுகவில் யாருக்கு அதிகாரம்? முடிவு எப்போது தெரியும்?

தரப்பின் சார்பில் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் 100 மேற்பட்டோருடன் ஓ.பி.எஸ் ஆதரவு அதிமுகவினர் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவரின் 14 கிலோ தங்க கவசத்தை பெறுவதற்கான மனுவை வங்கி முதுநிலை மேலாளர் ரேனு குப்தாவிடம் வழங்கினர்.

பின் செய்தியாளர்களை முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எங்கள் தரப்பின் சார்பில் வழக்கம் போல ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கையெழுத்திட்டு தேவரின் தங்க கவசத்தை பெறுவதற்கான கோப்புகளை வங்கி அதிகாரியிடம் வழங்கினோம்.

வங்கி அதிகாரிகள் எதிர் தரப்பில் இருந்தும் கவசம் பெற கோப்புகள் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். இரண்டையும் பரிசீலித்து முடிவை எடுப்பார்கள்.

தர்மம் வெல்லும் எப்போதும் போல ஓ.பன்னீர்செல்வம் தெய்வத்திருமகனார் தேவரின் தங்கக் கவசத்தை வங்கியிலிருந்து பெற்று வழங்குவார் என கூறினார்.

இதில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன், எம்.பி தர்மர், முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி தரப்பின் சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் தேவரின் தங்க கவசத்தை பெறுவதற்கான மனுக்கள் வழங்கப்பட்டது. நேற்று ஓபிஎஸ் தரப்பு சார்பில் மனு வழங்கப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகளை குழப்பமடைய செய்துள்ளது.

வருகின்ற 24ஆம் தேதி தான் யார் தரப்பிற்கு ஆவணங்களில் அடிப்படையில் வங்கி அதிகாரிகள் தேவரின் தங்க கவசத்தை அளிக்கிறார்கள் என்பது தெரியவரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.