தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்கொடுப்பனவுக்கு தேயிலை சபை இணக்கம்

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் முன் பணம் தொடர்பில் இலங்கை தேயிலை சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடன் அடிப்படையில் தேவையான வசதிகளை வழங்குவதற்கு தேயிலை சபை இணக்கம் தெரிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு குறித்து சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

தீபாவளி பண்டிகை எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.