Flipkart big billion day scam: இது என்ன பித்தலாட்டம்? வசமாக சிக்கிய பிளிப்கார்ட் நிறுவனம்!

இந்தியாவில் பண்டிகை காலம் வந்தால் முன்பெல்லாம் குடும்பத்துடன் சென்று துணி கடையில் புதிய துணிகளை எடுப்பார்கள். இதனால் துணி கடைகளில் கூட்டம் நிரம்பிவழியும். இதற்காகவே துணி கடைகளிலும் பல தள்ளுபடி விலை மற்றும் சலுகைகள் போன்றவை கிடைக்கும். ஆனால் காலம் மாறமாற நிலைமையும் மாறிவருகிறது.

துணி கடைகளின் விற்பனையை விட பெரிய அளவு விற்பனையை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் செய்கின்றன. இந்த ஷாப்பிங் தளங்களில் நமக்கு அனைத்துவித பொருட்களும் கிடைக்கின்றன.

மேலும் வீட்டிற்கே வந்து இவை டெலிவரி செய்யப்படுவதால் மக்களும் இந்த ஷாப்பிங் தளங்களை பயன்படுத்தி அதில் பொருட்களை வாங்குகிறார்கள். ஆனால் அவற்றில் பிரச்சனை இல்லாமல் இல்லை.

5G Smartphone வாங்குவது எப்படி? தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்ன?

இதுபோன்ற பண்டிகை கால விற்பனையில் நாம் ஒரு பொருள் ஆர்டர் செய்தால் அவர்கள் வேறு ஒரு பொருளை மாற்றி அனுப்பிவிடுவார்கள். இதனால் நாம் அந்த டெலிவரி பிரிக்கும் சமயம் நமது மகிழ்ச்சி போய்விடுகிறது. இதனை மீண்டும் திரும்ப கொடுத்து பொருட்களை வாங்கலாம் என்றாலும் நமக்கு தேவையில்லாத சிரமமும் மனஉளைச்சலுக்கு ஏற்படுகிறது.

இந்த நிறுவனங்கள் மக்களை முட்டாளாக்கவும் தயங்குவதில்லை அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதில் ஒரு t ஷர்ட் ஒன்று சலுகை என்ற பெயரில் விலையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே விற்பனை ஆகியுள்ளது.

உதாரணமாக சராசரி நாளில் 1,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் T Shirt 499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக ஆஃபர் விலை போடப்பட்டுள்ளது. ஆனால் Flipkart big billion day பண்டிகை கால விற்பனையில் அதே T Shirt ரூபாய் 2,499 விலை ஏற்றப்பட்டு பின்னர் 499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக போடப்பட்டிருந்தது.

இது ஒரு ஏமாற்றுச்செயல் ஆகும். ஏனென்றால் மக்களை இதுபோன்ற பண்டிகை காலங்களில் விலை குறைப்பு என்ற பெயரில் அழைத்து பொருட்களை இந்த நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. ஆனால் எந்த ஒரு விலை குறைப்பும் செய்யாமல் பொருளின் விலையை ஏற்றி பின்னர் விலை குறைப்பு என்ற பெயரில் பிளிப்கார்ட் நிறுவன விற்பனை செய்துள்ளது.

இந்த ஏமாற்று வேலையே பீகாரை சேர்ந்த காங்கிரஸ் MP ஹிமான்ஷு வெளிகொண்டுவந்துள்ளார். தனது ட்விட்டரில் அவர் இதேபோன்ற பல பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஏமாற்றுவேலைகளை பற்றி ட்வீட் செய்துள்ளார்.

மேலும் குறைந்த விலையில் ஐபோன் ஆர்டர் செய்த அவரை பிளிப்கார்ட் நிறுவனம் வேண்டும் என்றே அவரது ஆர்டர் Cancel செய்துவிட்டது. பின்னர் மீண்டும் அதே போனை ஆர்டர் செய்ய சென்றபோது முன்பு இருந்த விலையை விட அதிகமாக விலை ஏற்றபட்டிருந்தது. இதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மக்களுக்கு குறைந்த விலையில் ஐபோனை விற்பனை செய்ய மனம் இல்லாமல் இதுபோன்ற வேலைகளை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை மத்திய அரசு உடனடியாக கண்டுகொள்ளவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.