தாயுடன் கள்ளக்காதல்.. மகள் கர்ப்பம்: டிரைவர் கொலையில் 'பகீர்' தகவல்..!

டலூர் அருகே உள்ள குறவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவமணி (37). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சத்யா. காதல் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், சிவமணி வீட்டில் இருந்த போது சவாரிக்கு வருமாறு செல்போனில் அழைப்பு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிவமணி தனது மனைவியிடம் சவாரிக்கு செல்வதாக கூறிவிட்டு ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அதன்பின்னர், இரவு முழுவதும் சிவமணி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவர் எடுத்து பேசவில்லை.

பதறிப்போன அவரது மனைவி, தனது உறவினர்கள் உதவியுடன் சிவமணியை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால், எங்கு தேடியும் சிவமணி கிடைக்கவில்லை. இந்நிலையில், மறுநாள் காலையில் எஸ்.புதூர்-ராமாபுரம் வாழைத்தோப்பில் சிவமணி பிணமாக கிடந்துள்ளார். இதனை அந்தவழியாக சென்ற விவசாயிகள், பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார், சிவமணியின் உடலை சோதனை செய்தனர். அப்போது, அவருடைய கழுத்து அறுக்கப்பட்டும், உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களும் இருந்துள்ளன. அதன்பின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிவமணியின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில், அவருடன் கடைசியாக பேசியது ஒரு பெண் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த எண் யாருடையது என ஆய்வு செய்து வனிதா என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்தப் பெண் ஒரு சாராய வியாபாரி என்றும், இவருக்கும் சிவமணிக்கும் வெகு நாட்களாக கள்ளத் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

அடிக்கடி வனிதா வீட்டுக்கு சென்று வந்த சிவமணி, நாளடைவில் வனிதாவின் மகளையும் ஆசை வார்த்தை கூறி அவரிடம் பழகி அவரை கர்ப்பம் ஆக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வனிதா, சிவமணியை வரவழைத்து தனது கூட்டாளிகளின் உதவியோடு கொலை செய்து, அவரது உடலை வாழை தோப்பில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வனிதாவை கைது செய்த போலீசார், இச்சம்பவத்தில் வனிதாவுக்கு உடந்தையாக செயல்பட்ட மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.