அரசுப் பள்ளியில் அதிர்ச்சி..!! திடீரென மயங்கி விழுந்த 150 மாணவர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் தமிழ், தெலுங்கு, உருது பள்ளிகள் உள்ளன. தமிழ் வழி பள்ளியில் மட்டும் 1,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தமிழ் வழி பள்ளியில் மதியம் உணவு வேளைக்கு பின்னர், மாணவ, மாணவிகள் வகுப்புகளில் இருந்தனர்.

அப்போது மதியம் 2.30 மணியளவில் 6 மற்றும் 7-ம் வகுப்பறைகளில் இருந்த மாணவ, மாணவிகளை திடீரென்று விஷ வாயு தாக்கியது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதுள்ளது. வகுப்பறையில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மற்ற மாணவ, மாணவிகள் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்தனர். இதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக பள்ளிக்கு வந்த ஆம்புலன்ஸ்களில் மாணவ, மாணவிகள் ஏற்றப்பட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வாந்தி, மயக்கம் அடைந்த மாணவ, மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்ற மாணவர்கள் அருகிலுள்ள ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி வளாகத்திற்கு முன் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக வாந்தியை கட்டுப்படுத்த எலக்ட்ரால் கரைசல் வழங்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அவர் மருத்துவமனை வளாகத்தில் வெவ்வேறு இடங்களில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த மாணவ-மாணவிகளை நேரில் பார்வையிட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகளையும் நேரில் சந்தித்து அவர்களுக்கும், பெற்றோருக்கும் தைரியம் கூறினார்.

இதையடுத்து விஷ வாயு தாக்கியதில் வாந்தி, மயக்கம் அடைந்த மாணவி சுவேதா, மாணவர் சக்தி ஆகிய 2 பேர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாணவ-மாணவிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பள்ளியில் உள்ள செப்டிக் டேங்கில் கசிவு ஏற்பட்டு விஷ வாயு பரவியதால் மாணவர்களுக்கு மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.