சிவனுக்கு சிறப்பு பூஜை நடத்தினார்| Dinamalar

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், கேதர்நாத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு நடத்தினார். கோயிலுக்கு பாரம்பரிய ஆடையையும் வழங்கினார்.

மலைவாசிகளின் பாரம்பரிய
உடையில் கலக்கும் மோடி

கேதார்நாத்தில் பூஜை செய்து வழிபாடு

……….

புரோகிதர் மந்திரம் கூற தொடர்ந்து பிரதமர் மோடி சிவனை வழிப்பட்டார். சிறப்புபூஜையும் நடத்தினார்.

latest tamil news

கோயிலுக்கு வந்த மோடி, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய உடையான ‘சோழா டோரா’ அணிந்திருந்தார். மோடி, இதற்கு முன்னர் ஹிமாச்சல பிரதேசத்திற்கு வந்த போது, சம்பா மாவட்டத்தை சேர்ந்த பெண் பரிசாக வழங்கியதாக தெரிகிறது.

latest tamil news

கேதர்நாத் கோயிலுக்கு மோடியுடன் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி உடன் வந்தார்.

latest tamil news

கேதர்நாத் ரோப்கார் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய மோடி, தொடர்ந்து, ஆதிகுரு சங்கராச்சாரியார் சமாதிக்கும் சென்றார். தொடர்ந்து, கோயில் பகுதியில் நடக்கும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார்.

latest tamil news

கவுரிகுண்ட் முதல் கேதர்நாத் வரையிலான 9.7 கி.மீ., தூரத்திற்கு ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால், இரு பகுதிகளுக்கு இடையிலான பயண தூரம் 6 முதல் 7 மணி நேரம் ஆகும் நிலையில், ரோப்கார் பயணம் மூலம் வெறும் அரை மணிநேரம் மட்டுமே ஆகும். இந்த பயணத்தின் போது, ரூ.3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

latest tamil news

இங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பத்ரிநாத் செல்லும் மோடி, அங்கு வழிபாடு நடத்துவதுடன் பூஜை செய்ய உள்ளார். அங்குள்ள நதிக்கரையில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செயது, மணா கிராமத்தில் சாலை மற்றும் ரோப்வே திட்டத்திற்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.

latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.