தீபாவளி பண்டிகைக்கு இறைச்சி விற்பனை செய்ய புள்ளி மானை வேட்டையாடிய 4 பேர் கைது..!

திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு காப்புக்காடு வனப்பகுதியில் புள்ளி மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். 

இறைச்சிக்காக சிலர் சட்டத்தை மீறி வன விலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின் படி, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மான்கள், முயல்களை வேட்டையாடி, இறைச்சியை விற்பனைக்கு கொண்டு சென்ற பஞ்சமூர்த்தி, விக்னேஷ், காட்டுராஜா, விஜய் ஆகிய 4 பேரை பிடித்த வனத்துறையினர், 3 இருசக்கர வாகனங்கள், ஒரு நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.