எலுமிச்சை கிலோ ரூ.40க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, பாலூத்து, மயிலாடும்பாறை, வருசநாடு, குமணன்தொழு, மூலக்கடை, நரியூத்து, தும்மக்குண்டு, காந்திகிராமம், அரசரடி, வெள்ளிமலை, உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில தினங்களாக எலுமிச்சம் பழம் பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எலுமிச்சை பழங்கள் கொள்முதல் செய்ய மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் கடமலைக்குண்டு வருசநாடு பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.40 முதல் 45 வரை விற்பனையாகிறது. இதனால் எலுமிச்சை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து விவசாயி பிரபாகரன் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் எலுமிச்சை பழம் வரத்து குறைந்துள்ளது. இதனால் எலுமிச்சைக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. இன்னும் சில தினங்களில் எலுமிச்சை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.