காஜியாபாத், வகுப்பறையில் ஆசிரியர் அவமானப்படுத்தியதால், எட்டாம் வகுப்பு படித்த மாணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, காஜியாபாதில் தனா சிஹானி கேட் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் பிரின்ஸ் என்ற மாணவன் எட்டாம் வகுப்பு படித்தான். கடந்த ஆறு மாதங்களாக அவன் தன்னுடைய கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை.
இதையடுத்து, வகுப்பறையில் மற்ற மாணவர்கள் முன்னிலையில் பிரின்சை ஆசிரியர் அவமானப்படுத்துவது போல பேசியுள்ளார். இது பற்றி மாணவன் தன் பெற்றோரிடம் கூறியபோது, விரைவில் செலுத்தி விடுவதாக சமாதானம் செய்துள்ளனர்.
ஆனால், ஆசிரியர் தொடந்து அவமானப்படுத்தி நெருக்கடி தந்ததால், மனமுடைந்த பிரின்ஸ், நேற்று முன்தினம் படுக்கையறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். பெற்றோர் அளித்த புகாரின்படி, காஜியாபாத் போலீசார் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement