பிக்பாஸ் தனலெட்சுமியின் உண்மை முகம் இதுதான் : வெளிவந்த தகவல்கள்

பிக்பாஸ் சீசன் 6-ல் டிக்டாக் பிரபலமான தனலெட்சுமியும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். முதல் வாரத்திலேயே நேயர்களை முகம் சுளிக்க வைத்த தனலெட்சுமி, மறுவாரத்தில் குறும்படத்தின் மூலம் நல்ல பெயரை பெற்று வாழ்த்துகளை பெற்றார். தற்போது இந்த வாரத்தில் மீண்டும் தனது வன்மத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார். எனவே, அவர் மீது மீண்டும் நெகட்டிவான கமெண்டுகள் வர ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில் ஊடகமொன்றில் பேட்டிக்கொடுத்த தனலெட்சுமியின் நண்பர்கள் பிக்பாஸ் வீட்டில் தனலெட்சுமி சொல்லியதெல்லாம் பொய் என கூறியுள்ளனர்.
அதாவது, பிக்பாஸ் வீட்டில் முதல்வாரத்தில் கதை சொல்லும் டாஸ்க்கில் பேசியிருந்த தனலெட்சுமி தனக்கு அப்பா இல்லையென்றும், தன்னை அம்மா மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும் கூறியிருந்தார். மேலும், தன்னை மிகவும் ஏழை என்பது போல் காட்டிக்கொண்டார். ஆனால், அவரது நண்பர்கள் இதையெல்லாம் மறுத்துள்ளனர். அவர்கள் கூறியதிலிருந்து, தனலெட்சுமியின் நிஜ பெயர் சுகி. ஏழை என்று பிக்பாஸ் வீட்டில் சொல்லிய தனலெட்சுமி ஒரு ஜோடி செருப்புக்காக செலவழித்த தொகை மட்டும் 12000 ரூபாய். சொந்தமாக துணிக்கடை, பைனான்ஸ் தொழில் என செல்வ செழிப்புடன் மிகப்பெரிய வீட்டில் தான் தனலெட்சுமி வசித்து வருகிறார். அதுமட்டுமில்லை தனலெட்சுமி சில குறும்படங்களிலும் இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த இரண்டு திரைப்படங்களுமே தனலெட்சுமியின் சொந்த தயாரிப்பில் எடுக்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைதவிர சில மாதங்களுக்கு முன் ஷேன் ரோல்டன் இசையில் வெளியான 'பறை' என்கிற ஆல்பம் பாடலிலும் தனலெட்சுமி நடித்துள்ளார். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு பிக்பாஸ் வீட்டில் தன்னை மிகவும் சாதாரண பெண், பாவப்பட்ட ஏழை வீட்டு பெண் என்பது போல் காண்பித்து நடித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.