லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ விருப்பம்! விடுதலையாகும் நளினி உருக்கம் கலந்த மகிழ்ச்சி


லண்டனில் வசித்து வரும் தன் மகள் ஹரித்ராவுடன் வாழ விரும்புவதாக விடுதலை செய்யப்பட்ட நளினி தெரிவித்துள்ளார்.

நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் விடுதலை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயர்ஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய ஏழு பேரும் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர்.

பேரறிவாளன் கடந்த மே மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஆறு பேரும் இன்று சிறையில் இருந்து விடுதலை ஆகின்றனர்.

லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ விருப்பம்! விடுதலையாகும் நளினி உருக்கம் கலந்த மகிழ்ச்சி | Nalini Sriharan Releasing Prison Says Daughter

குடும்பத்துடன் சேரவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

தீர்ப்புக்கு பின்னர் பிரபல தமிழ் பத்திரிக்கைக்கு நளினி அளித்த பேட்டியில், பேரறிவாளன் விடுதலைக்கு பிறகு 6 பேரும் விடுதலையாவோம் என நம்பிக்கை இருந்தது, தற்போது விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

32 ஆண்டுகளாக மறக்காமல் இருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி.
32 ஆண்டுகளாக சிறையில் இருந்தோம், இனிமேல் என்ன சந்தோஷம்?
6 பேரும் அவரவர் குடும்பத்துடன் சேரவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

என் மகள் ஹரித்ராவுடன் வாழ விரும்புகிறேன், என் மகள் சொல்வதை வைத்து இனி என்ன செய்ய வேண்டும் என்று நடவடிக்கைகளை எடுப்பேன் என கூறியுள்ளார்.

நளினியின் மகள் ஹரித்ரா தற்போது லண்டனில் மருத்துவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.