வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை! தமிழகஅரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் …

கோவை: வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற  தமிழகஅரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

மறைந்த சந்தனகடத்தல் வீரர்பன் கூட்டாளிகள், ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய 2 பேரும் பல்வேறு வழக்குகள் காரணமாக, கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் , தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, அவர்களை விடுதலை செய்ய  ஆளுநருக்கு திமுக அரசு பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரை பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி  ஒப்புதல் அளித்துள்ளார்.  இதையடுத்து, கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த  ஆண்டியப்பன், பெருமாள் 2 பேரும்  விடுதலை செய்யப்பட்டனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.