சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து பயணிக்க சம்மதித்ததாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு மாறானவை

சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து பயணிக்க சம்மதித்ததாக சமூக ஊடகங்களில் தம்மைப் பற்றி வெளியான செய்திகள் முற்றிலும்   உண்மைக்கு மாறானவை என்று முன்னாள் அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன இன்று (16) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மேலும், கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மற்றும் அப்போதைய அரசாங்கத்தின் செயற்றிறன் இன்மை காரணமாக தான் பாராளுமன்றத்தில் தனியாக செயற்பட தீர்மானித்தேன். தற்போது எதிர்க்கட்சியின்  சுதந்திர உறுப்பினராக செயற்படுகிறேன். அரசாங்கத்தின் நல்ல வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், 2022 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து எந்தவொரு கலந்துரையாடலிலும் தான் பங்கேற்கவில்லை. எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிப்பது குறித்து இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.