பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், காவலர்கள் சென்ற வேன் மீது மர்ம நபர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 போலீசார் உயிரிழந்தனர்.
லக்கி மர்வாட் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காவல்துறை துணை ஆய்வாளர், காவலர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.