பெண் உள்ளிட்ட 9 பேர் கைது – அதிரவைக்கும் கேரளா சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது  சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமாகியிருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு காவல்துறை அவரை மீட்டது. அப்போதுதான் போதையுடன் தன்னை ஏராளமானோர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சித் தகவலை அவர் கூறியிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை

கொல்லம் பகுதியைச் சேர்ந்த டொனால்டு என்பவர் சிறுமிக்கு நட்பாகியிருக்கிறார். சிறுமி வேலை தேடிவந்த நிலையில், டொனால்டு வேலை வாங்கித்தருவதாக உறுதியளித்திருக்கிறார்.

பிறகு சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் மேலாளரும் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதேபோல வேலைக்கு வாக்குறுதி கொடுத்து, சிறுமியை மேலும் இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

தொடர்ந்து சிறுமியை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலைச் சேர்ந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் மூலம் ஏராளமானோர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இப்படி கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறார். இது தொடர்பாக எர்ணாகுளம், கொல்லம், திருச்சூர், வயநாடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 14 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. ஏற்கெனவே டொனால்டு கைதுசெய்யப்பட்ட நிலையில், ஹோட்டல் உரிமையாளர் தாமஸ், சலாம், அஜித்குமார், மனோஜ் சோமன், கிரிஜா, அச்சு, ஆண்டனி, மேத்திவ் உள்ளிட்ட ஒன்பது பேர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது

21 பேர் போலீஸின் சந்தேகப் பட்டியலில் உள்ளனர். விரைவில் மேலும் சில கைது நடவடிக்கைகள் நடக்கவிருக்கின்றன என்கிறது போலீஸ் வட்டாரம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.