
ஈராக்கில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
சுலைமானியா (Sulaimaniya) நகரில், வீட்டு மாடியில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
5 வாகனங்கள் சேதமடைந்தன. நெருப்பை அணைத்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடிகளில் சிக்கியவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.