ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம்.. 2 விமான நிலைய ஊழியர்கள் உயிரிழப்பு!

பெரு தலைநகரான லிமாவில் ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனத்துடன் மோதிய பயணிகள் விமானம் தீப்பிடித்தது.

இதில் விமான நிலைய தீயணைப்பு துறை ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சர்வதேச விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட LATAM Airlines விமானம் எதிரில் வந்த சரக்கு வாகனத்துடன் மோதி தீப்பிடித்தது.

இதையடுத்து விமானத்தில் இருந்த 102 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.