Varisu: வாரிசு படத்தை தடுக்கும் உதயநிதி.. கொளுத்திப்போடும் மாஜி அமைச்சர்..

தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தெலுங்கு இயங்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கிய இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டபடி வாரிசு படத்தை ஆந்திராவில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பொங்கலுக்கு சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாக இருப்பதால் விஜய் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், அதேநாளில் அஜித்தின் துணிவு படம் ரிலீசாக உள்ளது. தமிழ்நாட்டில் அந்த படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதால் வாரிசு படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது.

இதனால் விஜய்க்கும், உதயநிதிக்கும் மோதல் வெடித்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகுவதை மறைமுகமாக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தடுக்கிறது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜூ கூறியதாவது; தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூலமாக மூலமாக வந்தால் மட்டும் தான் திரைப்படம் வெளியாகும் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் திரைத்துறையினர் கொதித்துப் போய் உள்ளனர்.

அதிகமான செலவில் படம் எடுத்தாலும் ரெட்ஜெயண்ட் மூலமாக வந்தால் வெளியீடு நிலை உள்ளது. இந்த நிலை தான் வாரிசு திரைப்படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ரெட்ஜெயண்ட் மட்டும் தான் படம் எடுக்க முடியும் நிலை உருவாகும் என்றும் திரைத்துறை அழிவை நோக்கி செல்வதாகவும் அவர் சாடினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.