மும்பையில் 150 ஆண்டுகள் பழமையான ரயில்வே மேம்பாலத்தை 27 மணி நேரத்தில் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் – மஸ்ஜித் பண்டர் புறநகர் ரயில் பாதையில் கார்னாக் சாலையின் மேல் கட்டப்பட்ட பாலம் 150 ஆண்டுகளை கடந்து விட்டதால் மேம்பாலத்தை உடைக்கும் பணியை சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மத்திய ரயில்வே துவங்கியது.
350 முதல் 500 டன் எடை கொண்ட 4 கிரேன்கள், 400 தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்த ரயில் வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.