வெகுநேரமாக திறக்கப்படாத கதவு… உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஆத்தூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி சரண்யா (31). இவர்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தையும் மூன்று வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
image
இந்நிலையில் வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததை அடுத்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது சரண்யா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சரண்யாவின் உறவினர்கள் ஆத்தூர் ஊரக போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
image
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஆத்தூர் ஊரக போலீசார், சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.