சென்னை: அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உருவாக்கப்பட்டது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக செய்தியர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், அவசர சட்டத்தில் உள்ள அம்சங்கள் தான் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவில் உள்ளன. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் அமலுக்கு வரும். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ஏற்கனவே அதிமுக ஆட்சியால் நிறைவேற்றப்பட்டு பிறகு ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து புதிய சட்ட மசோதாவை நிறைவேற்ற உள்ளோம் என்று கூறினார்.