ஆன்லைன் ரம்மி தடை மசோதா: தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்..!

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக  விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று அமைச்சர் ரகுபதி, தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் தற்போதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என குற்றம் சாட்டிய நிலையில், தற்போது ஆளுநர் விளக்கம் கோரியிருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபரில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார். இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியில் கூறியிருந்தார். மேலும், ஆளுநரை சந்தித்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனால்,  மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநர் தரப்பில் இருந்து  மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதப்பட்ட உள்ளது.

ஆளுநர் தரப்பிலிருந்து எழுப்பிய கேள்விகளுக்கு நாளை அரசு தரப்பில் விளக்கமளிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.