இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்| Dinamalar

பாலியல் தொந்தரவு, மனம், உடல் ரீதியான துன்புறுத்தல், குழந்தை திருமணம் உட்பட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்து அவர்களுக்கு கல்வி, நீதி, சுகாதார வசதி வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் நவ. 25ல் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2008ம் ஆண்டில் இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்திருந்த செய்தியில், ‘உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பல நாடுகள் பெண்களைப் பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட இவற்றை விட மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய பிரச்சாரத்தை முன்நின்று செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

‘பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்ட ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் மூன்றில் ஒரு பெண் தன் வாழ்நாளில் வன்முறைக்கு ஆளாகிறார். பத்தில் ஒரு பெண் போலீஸ் உதவியை நாடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.