டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து… 9மணி நேரமாக தொடரும் போராட்டம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள சாந்தினி சௌக் மார்கெட் பகுதியில் நேற்றிரவு பயங்கர  தீ விபத்து ஏற்பட்டது.  40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்ட நிலையில், 9மணி நேரத்துக்கு பிறகு, தற்போது தீ பரவல்  கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

டெல்லி சாந்தினி சவுக்கின் பாகிரத் பேலஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் நள்ளிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், காவல்தறையினரும் தீயணைப்பு துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ பரவல் கட்டுக்குள் வராத நிலையில், அருகே இருந்த மற்ற தீயணைப்பு நிலையங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, சுமார் 40 தீயணைப்பு வண்டிகளுடன் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பணியில் ஈடுபட்டு தீ பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீயணைப்பு ரிமோட் கண்ட்ரோல் தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். தற்போதுதான் தீ பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல கோடி  ரூபாய் மதிப்புள்ள  பொருட்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக  கூறிப்படுகிறது.  எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.