ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்ட ராணுவத்தினர்; இருவர் உயிரிழப்பு.!

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது.

குஜராத் மாநிலத்தில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மீண்டும் வெற்றி பெற, பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்க தயாராக உள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் டஃப் கொடுக்கும் என கூறப்படுகிறது.

இதனால் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக தலைவர்கள் அனைவரும் தங்களது பங்குக்கு குஜராத்தில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அதேபோல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மார்க்கெட் பகுதியில் 2வது நாளாக பற்றி எரியும் தீ; 400 கோடி பொருட்கள் சேதம்.!

இந்தநிலையில் தேர்தல் பணிகளுக்காக துணை ராணுவப்படையினர் குஜராத் மாநிலத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அந்த வகையில் தேர்தல் பணிகளில் துணை ராணுவப்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலின் காரணமாக தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றனர். அதில் துணை ராணுவப்படையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போர்பந்தர் ஆட்சியர் ஏஎம் ஷர்மா தெரிவித்துள்ளார். மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.