ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க தயார்… ஆனால்… கண்டிஷன் போடும் இபிஎஸ் டீம் மேட்!

அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமாரின் மூத்த மகள் பிரியதர்ஷினி திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமணத்துடன் மேலும் 50 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கே.சுப்பையாபுரத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார், கருப்பசாமி திருக்கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தனது குடும்பத்தினருடன் மகளின் திருமண அழைப்பிதழை வைத்து பூஜை செய்தார். இதையெடுத்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது

அதிமுகவில் மீண்டும் சேர்த்து கொள்ளப்படுலாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வழிநடத்த உறுதி எடுத்து நாங்கள் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அந்த பயணத்தில் எல்லோரையும் அழைக்கிறோம். எல்லோரையும் சிவப்பு கம்பளம் விரித்து வருக, வருக என வரவேற்க அதிமுக தயங்கியது இல்லை.

ஆனால் ஊடகங்களில் வரும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டு திரித்து கூறும் நிலை உள்ளது. தாய் உள்ளத்துடன் எடப்பாடி பழனிச்சாமி அனைவரையும் அரவணைத்து செல்வதாக தான் இருக்கிறார்கள். அதில் எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று அதிமுகவை வெற்றி பாதையில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏற்கெனவே 2 பேர் தலைமையாக இருந்து எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. கொங்கு மண்டலத்தில் 100 சதவீதம் வெற்றி கிடைத்தது. ஆனால் இங்கு கிடைக்கவில்லை. இதற்கு ஆயிரம் காரணங்களை சொல்ல முடியும்.ஆகையால் காலத்திற்கேற்ப முடிவு எடுத்தால் தான் இயக்கத்தினை காப்பாற்ற முடியம் என்ற தொண்டர்களின் கருத்தின் அடிப்படையில்தான் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. தனிப்பட்ட கருத்தின்படி முடிவு எடுக்கப்படவில்லை” என்று ஆர்பி உதயகுமார் பதில் அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.