கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் 40 வயதுடைய பெண் ஒருவர் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 இளம் வயது மகள்கள் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியரின் கணவர் விபத்தில் இருந்து விட்டார். இந்த நிலையில் பேராசிரியை கடந்த 2014 ஆம் ஆண்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார்.
அந்த நபருக்கு வேறு ஒரு மனைவியும் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த நபர் பேராசிரியர் இரண்டாவது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பேராசிரியை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சட்டத்தின் கீழ் பேராசிரியர் இரண்டாவது கணவரை கைது செய்தனர்.