அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடை நீட்டிப்பு!

அதிமுக பொதுக்குழு நடத்தியதை அங்கீகரித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வருகிற 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து

தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு, ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கேவியட் மனுக்களையும் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஸ் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷ்னா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு தொடர்பாக இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு, “அதுவரை தேர்தல் நடத்தப்படாது” என்று உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கின் விசாரணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு டிசம்பர் 6 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தது. டிசம்பர் 6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூறவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, வழக்கு விசாரணையை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு தள்ளி வைக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அதேசமயம், டிசம்பர் 6 ஆம் தேதி விசாரிக்க எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.