மிலன்: இத்தாலி மற்றும் கேமரூன் நாடுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பிறந்து மூன்று வாரங்களே ஆன குழந்தை உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் அமைந்துள்ள இச்சியா தீவு, உலக அளவில் சுற்றுலாப் பயணியரின் மனம் கவர்ந்த இடமாக திகழ்கிறது. இங்கு சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள காசாமிச்சியோலா என்ற இடத்தில் 26ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், பிறந்து மூன்று வாரங்களே ஆன குழந்தை, இரண்டு சிறுமியர் உட்பட ஏழு உடல்களை மீட்டனர். அங்கு தங்கியிருந்த மேலும் ஐந்து பேரை மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஆப்ரிக்காவில் 14 பேர்:
இதற்கிடையே, வடக்கு ஆப்ரிக்க நாடான கேமரூன் தலைநகர் யாவுண்டேவில் நேற்று முன் தினம், ஒரு வீட்டில் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். இதில், 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement