மாமனார் வாங்கிய கடனுக்கு மருமகனை கடத்திய கும்பல்| Dinamalar

பொம்மனஹள்ளி : மாமனார் வாங்கிய பணத்துக்காக, கடன் கொடுத்தவர்கள் மருமகனை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டுவதாக, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, பொம்மனஹள்ளியை சேர்ந்தவர் லட்சுமண் ரெட்டி, 60. இவர் ஸ்வரூப், 40 என்பவரிடம் சில மாதங்களுக்கு முன், 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். இதில், 2 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டார். மீதம் 3 லட்சம் ரூபாயை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில், லட்சுமண் ரெட்டியின் மருமகன் ராஜசேகர், 30 என்பவரை, ஸ்வரூப் தன் நண்பர்களுடன் கடந்த 26ம் தேதி கடத்தி சென்றார். பின் அவரது அண்ணன் ராமச்சந்திராவுக்கு போன் செய்து, 50 ஆயிரம் ரூபாய் தருமாறு ‘கூகுள் பே’ மூலம் பெற்று கொண்டனர்.

ஆனாலும் விடுவிடுக்கவில்லை. நேற்று முன்தினம் மாமனார் லட்சுமண ரெட்டிக்கு போன் செய்து, ‘மீதம் 2.50 லட்சம் ரூபாயை கொடுத்தால்தான், உங்கள் மருமகனை விடுவோம்’ என கூறி உள்ளனர்.

பொம்மனஹள்ளி போலீஸ் நிலையத்தில் நேற்று மாமனார் லட்சுமண ரெட்டி, அண்ணன் ராமச்சந்திரா ஆகிய இருவரும் புகார் செய்துள்ளனர். இதையடுத்து, கடத்தப்பட்ட ராஜசேகர் மற்றும் கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.