அதிகாலையில் சோகம்.. பஸ் – லாரி மோதல்: 6 பேர் பலி.. 15 பேர் படுகாயம்..!

உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரைச்சின் தப்பே சிபா பகுதியில் இன்று அதிகாலை, பஸ்சும் லாரியும் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

ஜெய்ப்பூரில் இருந்து பஹ்ரைச் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் மீது தவறான திசையில் வந்த லாரி மோதியது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும், மீட்புப்படையினரும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 15 பேரில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்த அவர், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.