திருவள்ளூர்: 13 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை – தனியார் நிறுவன ஊழியர் கைது

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர்ப் பகுதிக்கு அருகில் வசிப்பவர் பிவின். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பிவினுக்குத் திருமணமாகி ஒரு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில் பிவின் மீது திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவில் ஒரு புகார் வந்தது.

பாலியல் வன்கொடுமை

பிவின் கடந்த 2021-ம் ஆண்டு அந்த பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் 13 வயது சிறுமி ஒருவரை அவர் வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குத் தனிமையில் அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். அதோடு, அந்த சிறுமியை ஆடையில்லாது புகைப்படமும் எடுத்திருக்கிறார். தொடர்ந்து அந்த சிறுமியிடம் இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது. மீறிச் சொன்னால், இந்த புகைப்படத்தை வெளியில் விட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அதோடு, பிவின் புகைப்படத்தைக் காட்டி மிரட்டி அந்த சிறுமியை அடிக்கடி வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்த இந்த கொடூரம் குறித்து அந்த சிறுமி சமீபத்தில் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இந்த விவகாரம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவுக்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் எலிஷா மோரீஸ் விசாரணை மேற்கொண்டார்.

பாலியல் தொல்லை

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், பிவின் மீது போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். 13 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.