வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள பண மோசடி வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கி வெளியான லைகர் என்ற திரைப்படம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட தயாரிப்பில் சட்ட விரோத பணி மாற்றம் நடந்துள்ளதாகவும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (ஃபெமா) மீறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
![]() |
இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகம் முன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement